புத்தளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நிர்மாணிக்கப்படும் மின் காற்றாலைகளுக்கு பொறியிலாளர்கள் எதிர்ப்பு
புதள்ளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடற்கரை பிரதேசத்தில் சுமார் 4500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் கற்றலை நிலையங்களை அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு இலங்கை மின்சார பொறியிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். -இதற்கான ஒபந்தம் இந்தியா இலங்கையில் 50 வருடங்கள் குறித்த கடற்கரை பரப்பில் இந்தியா நிலை கொள்ள ஏதுவாக அமையும் என்று தெரிவிக்கபடுகின்றது – இந்நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமூலம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கரையோர பிரதேசங்களை 50 வருடங்கள் ஆக்கிரமிப்பதுடன் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்தபின்னர் மீதமுள்ள மின்னை கேபல்களினால் இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன அத்துடன் 50 வருட காலத்திற்கு இலங்கை கடல் பிரதேசங்களை இந்தியாவிற்கு வழங்க கூடாதென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது பெரும் அநீதி எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிகின்றன
பின்னூட்டமொன்றை இடுக