புத்தளத்தில் முறையற்ற மின்சார விநியோகத்தால் உயர்தர மாணவர் மரணம் ?
மின்சாரத்தாக்குதல் காரணமாக புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உயர்தர மாணவரான முஹம்மத் ஹாஷிக் வயது 18 என்பவர் வபாதாகியுள்ளார் மேலும் ஒரு கற்பிணி பெண்ணும் அவரின் கணவரும் மின்சாரத்தாக்குதல் காரணமாக புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கற்பிணி பெண்ணின் நிலை தீவிரமாக கண்காணிக்க பட்டுவருவதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது மரண விசாரணை அதிகாரி நந்தன விமலவீர தெரிவித்துள்ள கருத்தில் தொலைகாட்சி எண்டனா மின்கம்பிகள் மீது விழுந்து அதை தொடர்ந்து மின்கம்பிகள் வீட்டின் மீது விழுந்து இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கொங்கிரீட் போஸ்டுகளுக்கு பதிலாக PVC பைப்பை பயன்படுத்தி இந்த மின்கம்பிகள் தற்காலிகமாக இணைக்க பட்டமையால் தொலைகாட்சி எண்டனா மின்கம்பிகள் மீது விழுந்து அதை தொடர்ந்து மின்கம்பிகள் குறித்த வீட்டின் மீது விழுந்துள்ளது என்றும் மரண விசாரணை ஆரம்பிக்க முன்னர் குறித்த மின்கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளது இந்த தகவல் நீதி மன்றத்துக்கு கையளிக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன .
Dear Editor,
Please send this article to The President in Sinhala or English.
Ifthicar
ஓகஸ்ட் 22, 2010 at 8:27 பிப