Lankamuslim.org

77 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிக்கு 21 வருட சிறை

leave a comment »

 நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவனுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.

பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரிவந்தது.

துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் தாக்குதலை நடத்தியதை ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொண்ட பிரெய்விக் அந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கவில்லை. தான் நேர்வே இஸ்லாமியமயப் படுத்தப் படுவதை தடுக்கவே இந்த தாக்குதல் செய்ததாகவும் தெரிவித்துள்ளான் . தனது மன நலம் குறித்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அந்த பயங்கரவாதி ஏற்கனவே தெரிவித்திருந்தான் .

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 இல் 10:35 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக