Lankamuslim.org

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்

leave a comment »

புறக்கோட்டை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது முதலில் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பொலிஸாரின் கட்டளையைப் பொருட்படுத்தாது அமைதியின்மை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டமையைத் தொடர்ந்து அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.-சக்தி நியூஸ்

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2012 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக