சம்மாந்துறையில் ஜனாதிபதி
சம்மாந்துறை செய்தியாளர்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் பிரதேசசபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் சம்மாந்துறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டங்களில் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, நிமால் சிறிபால டீ சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னூட்டமொன்றை இடுக