Lankamuslim.org

இலங்கையில் 04வது மிகப்பெரிய சுரங்கப் பாதை காத்தான்குடியில்

leave a comment »

F.M.பர்ஹான்: மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையில் 04வது மிகப்பெரிய சுரங்கப் பாதை மட்டக்களப்பு காத்தான்குடியில் எதிர்வரும் செப்டம்பர் 03ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு குறித்த சுரங்கப் பாதையை நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் ரத்னஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் நேற்று காத்தான்குடிக்கு விஜயம் செய்து இது தொடர்பான பணிகளை பார்வையிட்டதாகவும் இதன் பணிகள் துரித கதியில் இரவு பகலாக இடம்பெற்று வருவதாகவும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். சஜி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்படவுள்ள சுரங்கப்பாதை இலங்கையில் 04வது சுரங்கப் பாதையாக இருப்பதோடு; இதற்கு முன்னர் கொழும்பு பொரளை, குருநாகல்,கண்டி உள்ளிட்ட இடங்களில் சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 இல் 5:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக