இலங்கை அமெரிக்கரான படை அதிகாரி ஆப்கானில் பலி
ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கை அமெரிக்கரான அமெரிக்க விமானப் படை அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார் . சுரேஸ் -Army Chief Warrant Officer Suresh Krause- என்ற பெயர் கொண்ட 29 வயதான இவர் கடந்த 16 ஆம் திகதி கொல்லப்பட்டுள்ளார்.
இவர் தாக்குதலுக்கு பயன்படுத்தப் படும் ஹெலிகொப்டரில் ஆறு அமெரிக்க படையினருடன் பயணித்த போது ஆப்கான் போராளிகளின் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார். என்று அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றது. இவரின் உடல் அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது .
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடாவடியான ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை நடாத்திவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Gov. Jerry Brown orders flags at half-staff for Cathedral City soldier
உங்களுக்கும் என் தேசதிட்கும் சம்மந்தம் இருப்பதை இட்டு நான் வெட்கி தலை குணிகிறேன் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவளமான மரணங்களின் கடைசி ஏக்கங்கள் அதட்கு காரணமான ஆக்கிரமிப்பின் ஒவ்வொறு படையாளனையும் அவன் சந்ததிகளையும் சும்மா விடுமா என்ன??? அழிவுகள் தொடர்கதையாகவும் நிம்மதி அற்ற மரணங்களை தேடிகொண்டதுமே ஆக்கிரமிப்பு அழியாத சாதனைகளாக மிஞ்சும்
PMAMF Mohammed H.I.R.A.Z
ஓகஸ்ட் 29, 2012 at 1:30 முப
அமெரிக்க ஆப்கானில் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு அழிப்பு நடவடிக்கைக்கு நமது நாட்டு இளைஞர்களும் பலியாவது கவலை தரும் விடயமே!
உழைப்பதற்காகப் போனவர் உயிரை இழப்பது பொறுக்க முடியாது. அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.
அமெரிக்காவில் வேலை செய்யப் போனவர்களே தவிர யூத்தம் நடத்தச் சென்றவர்கள் அல்லர். அப்படியாக வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளியாரைத் தமது போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை அமெரிக்க நிறுத்த வேண்டும் என இலங்கையூம் அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.
nizamhm1944
ஓகஸ்ட் 29, 2012 at 7:43 முப