பொலனறுவை: தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு தனியான கல்வி வலயம்
பொலனறுவை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும், தேவைகளையும் ஒழுங்குமுறையாகவும், சீராகவும் நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் தனியான கல்வி வலயமொன்றைப் புதிதாக ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தினகரன் செய்தி தெரிவிக்கிறது .
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வின் ஆலோசனையின் பேரில் கல்வி பிரதிய மைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா விசேட அதிதி யாகக் கலந்துகொண்ட விசேட சந்திப்பிலேயே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பiர் அஹ்மட்டின் தலைமையில் அவரது இல்லத்தில் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆராய் வதற்கான விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன் போது இதற்கான கவம் செலுத்தப் பட்டுள்ளது
பின்னூட்டமொன்றை இடுக