காட்டுயானையின் தாக்குதலுக்கு வயோதிப பெண் பலி
காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்மா ந்துறை சென்னல் கிராமம் – 02ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முக்குலுத்தும்மா (வயது 65)என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று 12 மணியளவில் நடந்தது.
குறித்த நபர் தனது தென்னம்தோப்பில் இருந்துகொண்டு கிடுகு இளைத்துக் கொண்டிருந்த சமயம் திடீரென தோட் டத்திற்குள் நுளைந்த யானை அவ்விடத் திலிருந்து அத்தாயை தூக்கிக் கொண்டு சென்று அத்தோட்டத்தின் வேறு ஒரு இடத்தில் போட்டு மிதித்துக் கொன்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சம்மாந்துறை மல்வத்தை மஜீட்புரம் பிரதேசத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த யானை கூட்டத்தை வன விலங்கு அதிகாரிகளின் உதவியுடன் காட்டுக்கு விரட்டும் நடவடிக்கையின் போது ஒரு யானை தனித்து வேறாகி மஜீட்புரம் பண்டு வீதியூடாக வந்து கொண்டிருந்த வேளையில் அவ்வீதியூடாக வந்துகொண்டிருந்த ஆட்டோ வாகனத்தை மறித்துள்ள நிலையில், சாரதி ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியுள்ளார்.
ஆட்டோவை அடித்து சேதப்படுத்திவிட்டு சென்னல் கிராமம் பிரதேசத்தை நோக்கி சென்று, இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது என்பது சம்பவத்தை கண்டவர்கள் அவ்விடத்தில் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணை களை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.- தகவல் தினகரன்
பின்னூட்டமொன்றை இடுக