மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை அமைப்பாளரின் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது
கல்முனை செய்தியாளர்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.எச். நளீமின் கார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது . சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.நிஜாமுதீன், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் ஏ.எம்.ஏ.லத்தீப் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டார்.
இதுவிடயமாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பணித்ததோடு கட்சியின் தலைவருடன் இதுவிடயமாக பேசுவதாகவும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான வை.எல்.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.நிஜாமுதீன் உட்பட்ட குழுவினர் தெரிவித்தனர்.
இரவுவேளையில் வந்த சில அரசியல்வாதிகளின் குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும், சம்பவ நேரம் வீட்டிலிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளர் எம்.எச். நளீம் வெளியில் வந்து தடுப்பதற்கு முன்னரே இக்குண்டர்கள் இவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாவும் நளீம் தெரிவித்தார்.
இதற்கான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார; மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னூட்டமொன்றை இடுக