Lankamuslim.org

அழிவுச் சத்தியம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வருகை தரவில்லை.

with 4 comments

காத்தான்குடி செய்தியாளர்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழிவுச் சத்தியம் இடம்பெறவிருந்த இடத்திற்கு வருகைதரவில்லை. இது தொடர்பாக கருத்துரைத்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை அமீர் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி), பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் இருந்தும் அழிவுச் சத்தியத்திற்கு சமூகமளிக்கவில்லை என தெரிவித்தார்.

காத்தான்குடி 5 ஆம் குறிச்சியில் அமைந்துள்ள ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் ஷூறா சபை அங்கத்தவர்கள் 40 பேர் உட்பட அவர்களின் மனைவிமார்கள், பிள்ளைகள் சகிதம் ஜும்ஆத் தொழுகை முடிந்ததிலிருந்து சுமார் பி.ப. 2.45 மணி வரை அவரின் வருகைக்காகக் காத்திருந்தோம் ஆனால் அவர் அங்கு வரவில்லை என்றும் தெரிவித்தார் .

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் “தமிழீழ விடுதலைப் புலிகளின் NGO வாக செயற்படுகின்ற TRO விடமிருந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ரூபா 35 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியை பெற்றுக் கொண்டதாக குற்றச் சாட்டினை சுமத்தியுள்ளார். இதை தொடர்ந்தே இந்த சத்தியதிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது .

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 2:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. உங்களுக்கு இதே தொழிழாப் போச்சு இதற்கு முன்னரும் ஐ.எஸ்.ஏ. அமைப்பில் பல லட்சம் ரூபாய்களை நீங்கள் ஏப்பம் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இப்படி செய்யவில்லையே அப்போ அது உண்மையா

    nawas

    செப்ரெம்பர் 1, 2012 at 1:01 முப

  2. என்ன புதுனங்க இது தௌஹீத் கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்களால் மட்டும் ஏற்று கொள்ளபடும் அழிச்சத்தியம் மத்ஹப் முறைபடி அமல் நடக்கும் ஜுஃம்ஃஆ பள்ளியில் ஜுஃம்ஃஆ தொழுதோறால் அழைப்புவிடுக்க படுக்கிறது??? அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அழிசத்தியம் இஸ்லாமிய முறைபடியானது என்று பகிறங்கமாக அறிவிக்காமல் இருக்க தொஹீத் தவிர்ந்த வேரெந்த முஸ்லிம் சமூகமும் அழிசத்திஅயதை ஏற்றுகொள்ளுமா???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    செப்ரெம்பர் 1, 2012 at 5:06 முப

  3. ஏனப்பா உங்களின் இந்தத் தான்தோன்றி அரசியலுக்கெல்லாம் ஒரு முபாஹலா சத்தியங்கள் ???……..ஏதோ இஸ்லாமிய புண்ணிய ஸஹாபாக்களது அரசியலா இங்கு நடக்குது ? இஸ்லாமிய விவகாரங்களில் பண்ணப்படும் கிரியைகளை இந்த ஊத்தவாளி அரசியலிலும் கலக்க விட்டு அவற்றைக் கேலி செய்யாதீர் ?

    Ossan Salam - Doha

    செப்ரெம்பர் 1, 2012 at 2:44 பிப

  4. அன்பர்களே! நான் பி.அ.ஹிஸ்புல்லா அவர்களுக்காகப் பேசவில்லை. அவரது கூற்றின் உண்மைத்தன்மை பற்றியும் நான் விவாதிக்கவரவில்லை. தூய அரசியல் பற்றிப்பேசும் பி.எம்.ஜி.ஜி யினரே. டிசேட்,தொப்பி கவர்சிசி,ஏனைய முஸ்லிம் (அரசியல்தலைவர்கள்)பற்றிய பலாய்,பொன்சேக்காவின் வெற்றிக்குப்பாடு பட்டமை, பிர்தவ்ஸ் அவர்களுக்காக ஏனைய ஊர்மக்களது வாக்குகளை சேகரிக்கின்றமை போன்ற வேலைகளால் நீங்கள் எபபோதோ தூய்மை இழந்துவிட்டீர்கள். ஆக, இப்போது அழிவுச்சத்தியத்தின்மூலம் எந்த தூய்மையை நிருபிக்கப்போகிறீர்கள்???

    roshaen

    செப்ரெம்பர் 2, 2012 at 8:06 முப


பின்னூட்டமொன்றை இடுக