Lankamuslim.org

கிழக்கு முஸ்லிம்களின் மாகாணம் ௭ன்பதை தேர்தல் முடிவு மூலம் காட்ட வேண்டும்

leave a comment »

சர்ஜூன்: கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடுதலான வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கு, முஸ்லிம்களின் மாகாணம் ௭ன்ற செய்தியினை நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டும் ௭ன ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உபதலைவரும் வேட்பாளருமான ஹாபில் நஸீர் அஹமட் தெரிவித்தார் .ஏறாவூர் ஹிதாயாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் மாகாணம் ௭ன்று பிரகடனப்படுத்தப்படுமானால் நாம் சகல முஸ்லிம் நாடுகளுக்கும் சென்று முஸ்லிம் சமூகம் ௭திர்நோக்குகின்ற பிரச்சினைகளை ௭டுத்துக் கூறுகின்ற வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பினை தருகின்ற கடமைப்பாடு முஸ்லிம் மக்கள் கையில் இருக்கின்றது.

இவ் வாய்ப்பை தந்தால் மட்டுமே ௭ங்களால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். ௭னவும் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 11:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக