Lankamuslim.org

அக்கரைப்பற்று: தாக்குதல் நடத்த வந்த சந்தேகநபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படுவர்

leave a comment »

அத தெரண: தாக்குதல் நடத்த வந்த சந்தேகநபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்படுவர் என அக்கரைப்பற்று பொலிஸார் உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் செய்த நூற்றுக்கு மேற்பட்ட தமது ஆதரவாளர்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு பகல் உணவுக்குச் சென்றதாகவும் அப்போது தாம் சென்ற வீதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் திரும்பி வரும்போது போலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டிருந்ததாவும் ஹாரிஸ் எம்பி அத தெரணவிடம் குறிப்பிட்டார்.

அதன்போது தமது வாகனங்களை இடைமறித்த முச்சக்கர வண்டியில் வந்த 30ற்கும் மேற்பட்டோர் வாகனங்களைத் தாக்கி தம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் தம்முடன் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்ட போராடியதாகவும் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்த வந்தவர்கள் விபரம் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், சந்தேகநபர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.- தகவல் அத தெரண

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 5:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக