Archive for திசெம்பர் 3rd, 2010
சிங்கள மொழியில் மட்டும் அபாய அறிவிப்பு பலகைகள்
மாத்தளை, கண்டி A9 வீதியில் ஹலால் பிட்டி என்ற பிரதேசத்தில் மண் சரிவு நிலச்சரிவு, அபாயம் உணரப்டுகின்றது உக்குவளை உள்ளடக்கிய சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அண்மையில் அறிவித்தது
குறித்த இந்த பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் மாறும் பாரிய கருங்கற்கள் கடந்த நாட்களாக விழுந்துள்ளன. இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது பாதைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாலும் மண் மேடுகள், பெரிய கற்கள் வீதியல் விழுவதாலும் வீதியில் செல்பவர்களை அறிவுறுத்தும் அறிவிப்பு பதாகைகள் சிங்கள மொழியில் மட்டும் வைக்கப் பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நூர்தீன் மசூர் அவர்களுக்கு காத்தான்குடியில் ஜனாஸா தொழுகை
நேற்று மரணமடைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூருக்கு இன்று (3.12.2010) கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. தொழுகையினை மௌலவி அப்துல் காதர் நடாத்தி வைத்து பிராத்தனையையும் நடாத்தினார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சம்மாந்துறையில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்பாட்ட ஊர்வலம்
இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்பாட்ட ஊர்வலம் வெள்ளிக் கிழமை ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை ஹிஜ்றாப் மஸ்ஜித் முன்றலில் இருந்து பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்து பலஸ்தீனம் வாழ்வதற்கு வழி விடு , உகல ஏகாதிபத்தியமே எங்கே உனது சமாதானம், ஒபாமாவே எங்கே உனது சமாதானம” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோசம் எழுப்பினர்.
இந்த ஆர்பாட்ட எதிர்ப்பு ஊர்வலமானது பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தினை முன்னிட்டு சம்பந்துரை வாலிபர் அமைப்புகள் ,சோஷலிச இளைஞர் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புத்தளத்தில் ஆர்பாட்டம் நடைபெறுகின்றது
இணைப்பு-2 கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும் முன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி ராசிக்கை கடத்தியவர் என்று தெரிவிக்கப்படும் நௌசாத் என்பவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரும் ஆர்பாட்டம் இன்று வெள்ளிகிழமை மதுரங்குளியில் நடைபெறுகின்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள புத்தளம் பிரதேச வாழ் மக்கள் ஆர்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து போலீஸ் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் சந்தேக நபரை கைது செய்வதாக மேலும் படங்கள் ,Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரிட்டனுக்கு எதிரான ஆர்பாட்டம்
பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முகம்கொடுத்த சூழ்நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடமைப்பு மற்றும் பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »