Archive for திசெம்பர் 23rd, 2010
முஸ்லிம் என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்
M.ஷாமில் முஹம்மட்
இருப்பு சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் . ஒரு முஸ்லிமை பொருத்தவரை சிந்தனைதான் இருப்பை தீர்மானிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் விவசாயியாகவும் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் மத்தியதர உயர்தர வர்க்கத்தவனாகவும் இருகிறான் இது வர்க்க அடையாளம் , ஒரு முஸ்லிம் வடக்கு சார்ந்தவனாக கிழக்கு சார்ந்தவனாக இருகிறான் இது பிரதேச அடையாளம், ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ இருகிறான் இது பாலியல் அடையாளம் ஒரு குடும்பதுக்குள் தந்தையாக, தாயாக, மகனாக இருகிறான் இது உறவு முறை அடையாளம் .
இந்த அடையாளங்களைப் போன்ற ஒரு அடையாளம்தான் மொழி அடையாளம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருகிறான் இது மொழிஅடையாளம் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சகல குடும்பங்களையும் உள்ளடக்கிய திட்டம் தேவை.
முஹம்மது சரீப்
புலிகளுடான இறுதி யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர் பார்த்ததை விட குறைந்தளவிலேயே உள்ளது. மன்னார் மாவட்டத்தின் சில முஸ்லிம் குடியிருப்புகள் 1991இன் ஆரம்பத்திலேயே இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன. இதனால் மன்னார் நகரப்பகுதி முஸ்லிம்கள் 1992 க்கு பிற்பாடு மன்னார் நகர் சென்று சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
வவுனியா-மன்னர் வீதியின் இடைநடுவே புலிகள் இராணுவத்தின் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்நததால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. அத்துடன் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் வீடு கடைகள் கட்டிடங்கள் என்பன புலிகளாலும் அவர்களைச் சார்ந்த சில விஷமிகளாலும் அழிக்கப்பட்டிருந்தன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »