Archive for திசெம்பர் 19th, 2010
நடைமுறையில் முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெறுகின்றதா ?
யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் 650 வரையான குடும்பங்கள் தம்மை யாழ்பாணத்தில் குடியேற்றுமாறு கூறி அதற்குரிய ஆவணங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ளது என்றும் இருப்பினும் யாழ்ப்பாணம் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவையான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் திரும்பி சென்றுள்ளதாகவும் எமது யாழ்ப்பாண செய்தியாளர் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார்.
அதேவேளை மன்னார் தாராபுரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இரண்டு கிராமங்களிலும் 1090 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்ய அழைத்து வரப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சார் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் கடந்த 1990 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் கற்பிட்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களில் ஒரு பகுதியினர் இவ்வாறு கடந்த வாரங்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று எமது மன்னார் செய்தியாளர் lankamuslim.orgக்கு தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நடைபெறபோகும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறைப்படிதான் நடைபெறும் ?
உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனவர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையில்தான் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு என்று என்று தெரிய வருகின்றது .
ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய உள்ளுர்ராட்சி தேர்தல் முறைக்கு அமைவாக விகிதாசார மற்றும் வட்டார கலப்பு தேர்தல் நடாத்து வதற்கு அரசு திட்டமிட்டுள்ளபோதும் குறுகிய காலத்துக்குள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி இருப்பதால் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »