Archive for திசெம்பர் 28th, 2010
சம்மாந்துறையில் மதில் இடிந்து விழுந்து சிறுவன் வபாத் !
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்மாந்துறை விளினையடிச் சந்தியில் நள்ளிரவு 12.30 அளவில் வீட்டு மதில் உடைந்து விழுந்ததன் காரணமாக வீட்டில் உறங்கிகொண்டிருந்த 12 வயது சிறுவன் முஹம்மத் றிப்கான் என்ற சிறுவன் ஸ்தலத்திலேயே வபாத்தகியுள்ளார்.
அங்கு பெய்துகொண்டிருந்த கடும் மழை காரணமாக வீட்டின் சுவர் உடைந்து விழுந்துள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது . இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறித்த சிறுனின் தாய் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார் என்று எனது lankamuslim நிந்தவூர் செய்தியாளர் தெரிவிக்கின்றார் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்திய உளவு அமைப்புக்கு புதிய தலைவர்
இந்தியா தான் வெளிநாடுகளை உளவறியவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உருவாக்கப்பட்ட அமைப்பான “றோ”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி -Sanjeev Tripathi- என்பவர் நியமிக்கப்படுகிறார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் றோ அமைப்பின் விமானப் ஆய்வு மையத்தின் தலைவராக Air surveillance devision of the RAW இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப் பொறுப்பில் இருப்பார்
தற்போது றோவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப் படுகிறார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »