Archive for திசெம்பர் 20th, 2010
அஷ்ரப் நகர முஸ்லிம்களின் காணி அனுமதி ரத்து திட்டமிட்ட இனத்துவேசச் செயல்:தவிசாளர் அன்சில்
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர,இரு வாரங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அஷ்ரப் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பிக்கவில்லை என்றும், அதன் காரணமாக – இவர்களின் காணி உத்தரவுப் பத்திரம் வலுவிழந்து போயுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிறுபான்மை இன முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி அல்லாமா இக்பால்:ரவூப் ஹக்கீம்
பாகிஸ்தானின் பெரும் கவிஞரும், சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளருமான அல்லாமா இக்பாலின் நினைவு தின வைபவம் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் இடம்பெற்றது. அல்லாமா இக்பால் கவிஞராக மட்டும் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டாலும் அவர் மிகவும் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் என்பது பலரும் அறியாத விடையம் பாகிஸ்தான், இலங்கை நட்புறவுச் சங்கம் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது,
பாகிஸ்தான் சிந்தனையாளர் அல்லாமா இக்பாலின் பெருமைகள் இந்தியா, இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடையே நீங்கா நினைவுகளாக உள்ளன. அன்னாரின் அரசியல், இலக்கிய வழிகாட்டல்கள் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு சிறந்த முன்மாதிரி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »