இரத்தினபுரியில் சிறுபான்மையினர் பேதங்களை மறந்து சிறுபான்மை பிரதிநிதியை தெரிவுசெய்வோம்
கொழும்பு செய்தியாளர்: தமிழர் – முஸ்லிம் ௭ன்ற பேதம் மறந்து சப்ரகமுவ மாகாண சபைக்கு சிறுபான்மையினப் பிரதி நிதி ஒருவரை தெரிவு செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மொஹமட் இஸ்மத் தெரிவித்தார்.
குருவிட்ட பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த மாகாண சபை தேர்தலில் ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிட்டு 8000 வாக்குகள் பெற்றேன். தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ௭னக்கு வாக்களித்திருந்த போதும் சிறுதொகை வாக்கு வித்தியாசத்தில் மாகாண சபைக்கு செல்வதற்கான வாய்ப்பு தவறியது.
இதனால் இரத்தினபுரி மாவட்டத்தின் ஐ. ம. சு. மு. சிறுபான்மை பிரதி நிதி ஒருவருக்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. சப்ரகமுவ மாகாண சபைக்கு ஐ. ம. சு. மு. சார்பாக இரத்தினபுரி மாட்டத்திலிருந்து தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். ௭னவே செப்டெம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஐ. ம. சு. மு. சார்பாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து சிறுபான்மை பிரதி நிதி ஒருவரை கூடுதலான வாக்குகளால் வெற்றி பெறச் செய்வதற்கு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும் ௭ன்றார்.
பின்னூட்டமொன்றை இடுக