தகுதியானோருக்கு மாத்திரமே முதலமைச்சர் பதவி: ஜனாதிபதி
ஹம்பஹா செய்தியாளர் : தற்போது நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கு முதலமைச்சர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்படமாட்டார்கள் எனவும், தகுதி தராதரத்தைப் பார்த்தே முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்களுக்கு தகுதியான இடங்களை வழங்குவது ஆளும் அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதனை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இரத்தினபுரி நகர சபை விளையாட்டங்களில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக