இந்திய பிரதமர் மற்றும் முக்கிய புள்ளிகளை கொலை செய்ய புலிகள் திட்டம் ?
இந்திய பிரதமர் மன்மோகன் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில் விரிவாக பார்க்க
புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என தெரியவந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக பொலிஸார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்தியாவில் புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும், சில சக்திகளும் தயாராகியுள்ளதாக புலிகளின் இணையதளங்கள் குற்றம் சாட்டியுள்ளன
பின்னூட்டமொன்றை இடுக