Lankamuslim.org

பொது­ ப­ல ­சேனா அமைப்புடன் இந்திய பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு !

leave a comment »

Boபெளத்த, இந்து மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ், சிங்­கள மக்­களைப் பாது­காப்­பதில் நாம் அக்­கறை செலுத்­துவோம் இந்த விட­யங்­க­ளுக்கு இந்­தி­யாவும் எமக்கு துணை நிற்­க­வேண்டும் என்று பொது­ப­ல­சேனா

அமைப்­பினர் பா.ஜ.க.வின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது என ஊடக தகவல்கள் குறிப்பிடுகிறன

அதேவேளை இலங்கை வந்­துள்ள பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செய­லாளர் முர­ளி­தர்ராவ்,கட்­சியின் வெளிவி­வ­கார அழைப்­பாளர் விஜய் ஜொலி ஆகியோர் நேற்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யியுள்ளனர் . கிரு­லப்­ப­னையில் உள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

குறித்த சந்திப்பின்போது பேசப் பட்ட தகவல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலில் : இந்தச் சந்­திப்புத் தொடர்பில் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே கருத்து தெரி­விக்­கையில் பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­த­தீய நந்­த­தேரர் ஆகியோர் மேற்­கொண்­டி­ருந்தோம்.

Boஇந்­திய – இலங்கை உறவு முறை மிக நீண்ட கால­மாக உள்­ளது. அர­சி­ய­லுக்கு அப்பால் கலா­சார பொரு­ளா­தார ரீதி­யிலும் இரு நாடு­களும் நல்ல உற­வினை மேற்­கொண்டு வரு­கின்­றது.அதேபோல் இந்து பெளத்த உறவு முறையும் மிக நல்ல நிலையில் நில­வு­கின்­றது. எனவே, இவற்­றினை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையில் தமிழ் மக்கள் சிங்­கள மக்­க­ளுடன் நல்ல உற­வினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். இது மேலும் பல­ம­டைய வேண்டும். அதேபோல் பௌத்த – இந்து தொடர்­பு­களும் நெருக்­க­மா­ன­வையே.ஆகவே, தொடர்ந்தும் இந்­திய – இலங்கை உறவு முறை­யா­னது அர­சியல், கலா­சார மத அடிப்­ப­டையில் பல­ம­டைய வேண்டும். தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுத்­த­ரு­வதில் பொது­பல சேனா துணை நிற்கும்.

அதேபோல் இலங்­கையில் பௌத்த தமிழ் மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ் – சிங்­கள மக்­களை பாதுகாப்பதிலும் நாம் அக்கறை செலுத்துவோம்.எனவேஇ இந்தியாவும் இவ்விடயங்களில் எமக்கு துணை நிற்க வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2014 இல் 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக