பலஸ்தீன அப்பாசுடன் மஹிந்த சந்திப்பு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை நேற்று சந்தித்து பேச்சு
நடத்தியதுடன் அந்நாட்டுக்கான ஒரு மில்லியன் டொலர்கள் நன்கொடையையும் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பலஸ்தீனத்துக்கான இந்த நன்கொடையை அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூயோர்க்கில் நேற்று பலஸ்தீன ஜனாதிபதியை சந்தித்தபோதே இந்த நன்கொடையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையளித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது பலஸ்தீன மக்களின் தற்போதைய நிலைமை குறித்தும் மேற்குக்கரை மற்றும் காஸா பிராந்தியங்களின் நிலை குறித்தும் விளக்கியுள்ளார்.
பின்னூட்டமொன்றை இடுக