Lankamuslim.org

பொது பல சேனாவின் கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பதில்

leave a comment »

87688008induஇலங்கையிலுள்ள இந்துக்களை கிறித்தவ , இஸ்லாம்  மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப் போவதாகவும் கடும்போக்கு பொதுபல சேனா சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டில் தெரிவித்திருந்தது , ஆனால்   பொது பல சேனாவின்

மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருவதாகக் கூறியுள்ளதுடன் சிங்கள- பெளத்த ஆட்சியாளர்களினாலேயே வடக்கு கிழக்கில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தையா நீலகண்டன் மேலும் குற்றம் சாட்டியுள்ளார் .

அதேபோன்று   இனத்துவேஷ கருத்துக்களையும் மதவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளமை தொடர்பில் கிறிஸதவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை எம். சக்திவேல் விசனம் வெளியிட்டுள்ளார் .

பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும் அந்த அமைப்பின் கருத்துக்களை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் மேலும் கூறியுள்ளார்

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2014 இல் 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக