Lankamuslim.org

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையில்

leave a comment »

lankaநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போதே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு எண்ணியுள்ளோம். அதன்படி இந்த தேர்தல்கள் தொகுதி வாரியாகவே இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு எல்லை நிர்ணயப் பிச்சினை காணப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வு பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 19, 2015 இல் 11:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக