Lankamuslim.org

மாடுகளை ஏற்றிசெல்ல பயன்படுத்தப்படும் இரு லொறிகள் எரியூட்டப்பட்டுள்ளது

leave a comment »

1தெல்தெனிய பொலீஸ் பிரதேசத்தில் திகனை எள்ற இடத்தில் விசமிகளால் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இரண்டு  லொரிகள் எரியூட்டப்பட்டுள்ளது .  பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொரிகளும் அதிகாலை சுமார்  4. 00 மணியளவில் தீயிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேற்படி இரண்டு லொரிகளும் மாடுகளை ஏற்றி வருவதற்குப் பயன் படுத்தப்படுவதாகும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாடு வியாபாரம் தொடர்பான போட்டி அல்லது மாடறுப்பு தொடர்பான மாற்றுக் கருத்துக் கொண்டவர்களது வேலையாக இது இருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாதாகப் பொலீசார் தெரிவித்தனர்.

இச்சம்சத்தில் இரண்டு லொரிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல இலட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.-TC

1 2

Written by lankamuslim

செப்ரெம்பர் 21, 2015 இல் 6:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக