Lankamuslim.org

உயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை

leave a comment »

supremecourtஉயர் நீதிமன்றின்  இரண்டு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்களின் நடத்தை காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு நீதவான் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு நீதவானின் மனைவி ஓர் ஆலோசனை நிறுவனமொன்றை நடாத்தி வருவதாகவும் அதில் குறித்த நீதவானின் பங்களிப்பு தொழில்சார் நியதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதவான்களின் தொழில்சார் ஒழுக்கவிதிகளை உச்ச அளவில் உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த இருவருக்கு எதிராகவும் அரசாங்கம் குற்றப் பிரேரணை கொண்டு வந்து அவர்களை நீக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2015 இல் 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக