Lankamuslim.org

SLMC – TNA இன்று சனிக்­கி­ழமை சந்­திப்பு

leave a comment »

 SLMC + TNAஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர்­க­ளுக்­கும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்கு ­மி­டை­யி­லான முக்­கிய சந்­திப்பு ஒன்று இன்று சனிக்­கி­ழமை கல்­மு­னையில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது.   முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் கட்­சித்­த­லை­வரும்

அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம்,  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செய­லாளர் நாயகம் எம்.ரீ. ஹஸ­னலி  பிரதி செய­லா­ளரும் கல்­முனை மாந­கர மேய­ரு­மான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம். நிஸாம் காரி­யப்பர்,  சிரேஷ்ட பிர­தித்­த­லை­வரும்  கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­ன­ரு­மான ஏ.எல்.அப்துல் மஜீத் , தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன்இ தமி­ழ­ரசுக் கட்­சியின் புதிய தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா,  கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன்,  ரெலோ அமைப்பின் செய­லாளர் ஹென்ரி மகேந்­திரன் ஆகி­யோரும் இச்­சந்­திப்பில் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

தற்­போ­தைய அர­சியல் சூழ்­நிலை மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் தமிழ், முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு ,  மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாறை மாவட்­டங்­களில் நிலவும் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான பிரச்­சி­னைகள் தொடர்பில் சுமு­க­மாகப் பேசி தீர்­வு­க­ளைக்­காண்­ப­துவும் இச்­சந்­திப்­பின்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே தமிழ் – முஸ்லிம் தலை­வர்­க­ளுக்­கி­டையே ஆரம்­பித்து இடையில் விடு­பட்­டது போன்­றல்­லாது இம்­முறை ஆரம்­ப­மாகும் சந்­திப்பும் பேச்­சு­வார்த்­தை­களும் தொடர்ந்­தேர்ச்­சி­யாக எதிர்­கா­லத்தில் இடம்­பெ­று­மென முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ரி. ஹஸ­னலி நம்­பிக்கை தெரி­வித்தார்.

அதே­வேளைஇ இனப்­பி­ரச்­சி­னைத்­தீர்வில் முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் ஏனைய தமிழ் – முஸ்லிம் நிலைப்­பா­டுகள் தொடர்­பிலும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வரு­டாந்த மாநாட்டில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் குறித்தும் இச்­சந்­திப்பில் ஆரா­யப்­ப­டு­மென தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 27, 2014 இல் 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக