SLMC – TNA இன்று சனிக்கிழமை சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு மிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை கல்முனையில் இடம்பெறவிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித்தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினருமான செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸனலி பிரதி செயலாளரும் கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட பிரதித்தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்இ தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் ஹென்ரி மகேந்திரன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ், முஸ்லிம்களின் நிலைப்பாடு , மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான பிரச்சினைகள் தொடர்பில் சுமுகமாகப் பேசி தீர்வுகளைக்காண்பதுவும் இச்சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளது.
ஏற்கனவே தமிழ் – முஸ்லிம் தலைவர்களுக்கிடையே ஆரம்பித்து இடையில் விடுபட்டது போன்றல்லாது இம்முறை ஆரம்பமாகும் சந்திப்பும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தேர்ச்சியாக எதிர்காலத்தில் இடம்பெறுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸனலி நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளைஇ இனப்பிரச்சினைத்தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஏனைய தமிழ் – முஸ்லிம் நிலைப்பாடுகள் தொடர்பிலும் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்படுமென தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
பின்னூட்டமொன்றை இடுக