நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க .. இலங்கை வந்துள்ள அஸின் விராது
மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும் (படங்கள்)
பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளார் .
முஸ்லிம், கிறிஸ்தவ சிவில் அமைப்புக்கள் அஸின் விராது இலங்கை வருவதற்கு விசா வழங்க வேண்டாம் என கோரியுள்ள நிலையில் இவரின் வருகைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதுடன் நாளை 28 ஆம் திகதி பாரிய சங்க மாநாடு ஒன்றுக்கும் பொது பல சேனா ஏற்பாடுகளை செய்துள்ளது .
இங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளை தடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ யோர்க்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பினரிடம் உத்தரவாதமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய வார்த்தைகளை உடனடியாகவே பொய்ப்பிக்கும் நடவடிக்கையாகவே இது அமைத்துள்ளது என ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.
பின்னூட்டமொன்றை இடுக