மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் அர்ஷக் அஹமட் முதலிடம்
வெளியிடப்பட்ட இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் முஹம்மது அன்வர் அர்ஷக் அஹமட் 193 புள்ளிகளை
மாவட்ட மட்டத்தில் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேற்படி மாணவன் முஹம்மது அன்வர் அர்ஷக் அஹமட் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள ஹிழுறியா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம்.அன்வர்இ காத்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமை புரியும் உம்மு சபீனா அன்வர் ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் F.M.பர்ஹான்
பின்னூட்டமொன்றை இடுக