Lankamuslim.org

நாட்­டுக்குள் முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பும் விஸ்­த­ரிப்பும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது

leave a comment »

WI3இணைப்புக்கள் : பொது­ப­ல­சேனா அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த பௌத்த சங்க சம்­மே­ளன ஒன்­று­கூடல் நிகழ்வு மியன்­மா­ரைச்­சேர்ந்த விராது தேரரின் பங்­கேற்­புடன் கொழும்பு சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில்

ஆரம்­ப­மா­னது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் கிரம விம­ல­ஜோதி தேரர் தலை­மையில் ‘நாட்டை பாது­காக்கும் வழி’ எனும் தொனிப்­பொ­ருளில் ஒன்று கூடல் நடை­பெற்­றது. சிங்­கள, பௌத்த மர­பு­களை பறை­சாற்றும் வகையில் மேடை அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் உள்­ளக அரங்கைச் சுற்றிபௌத்த கொடி என்­பன தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. சிங்­கள பௌத்த  பாடல்கள் ஒலிக்­கப்­பட்­ட­துடன் பொது­ப­ல­சேனா அமைப்பின் வெளி­யீ­டு­களும் இதன்­போது விற்­பனை செய்­யப்­பட்­டன.

மியன்­மாரை சேர்ந்த விராது தேரருக்கு அரச விசேட பிரமுகர் வி.ஜ.பி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எம்.எஸ்.டி மற்றும் பி.எஸ். டீ பாதுகாப்பும் வழங்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது  இந்­நி­கழ்வில் இந்­தியா, நேபாளம், ஜம்­மு­கஷ்மீர் உள்­ளிட்ட வெளி­நாட்டுப் பிரதிநிதிகள் அகில இலங்கை இந்து சம்­மே­ளனப் பிர­தி­நி­திகள், 5,000 க்கும் மேற்­பட்ட பௌத்த தேரர்கள் ஆதி­வா­சி­களின் தலைவர் வன்­னி­ய­லத்தோ மற்றும் பொது­மக்கள் என ஏரா­ள­மானோர் கலந்து கொண்­டனர்.

மியன்­மாரைச் சேர்ந்த விராது தேர­ருக்கு அர­சினால் பலத்த பாது­காப்பும் வழங்­கப்­பட்­டி­ருந்­ததுடன் . அவரை  எவரும்  நெருங்க முடி­யா­த­வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. படப்பிடிப்பாளர்கள் கூட அவரை தொலைவிலிருந்தே புகைப்படமெடுக்க வேண்டியிருந்தது.

கலகொட அத்தே ஞானசார தேரர்

சிங்கள பௌத்தர்களால் முஸ்லிம் வஹாபி அடிப்படை வாதத்தை தடுக்க முடியாமல் இருப்பது வெட்கப்படவேண்டிய விடயம் , நாட்­டுக்குள் முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பும் விஸ்­த­ரிப்பும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது என  அங்கு உரையாற்றிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்­கள பௌத்த நாடான இலங்­கைக்கு விராது தேரர் வரு­வதை தடுப்­ப­தற்கு முஸ்லிம் கவுன்­ஸி­லுக்கு என்ன அதி­காரம் உள்­ளது? அவர்கள் யார்? இந்த மாநாடு முடிந்த பின்னர் அவர்­களை நாம் கவ­னித்துக் கொள்வோம் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

தமி­ழர்கள் சிறு­பான்மை இன­மாக இருந்­தாலும் பிர­பா­கரன் தனி­நாடு கோரினார். அத் தைரி­யத்தை பாராட்­டு­கின்றேன். ஆனால் பெரும்­பான்மை இன சிங்­கள பௌத்­தர்­களால் முஸ்லிம் வஹாபி அடிப்­ப­டை­வா­தத்தை தடுக்க முடி­யாமல் இருப்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என்றும் தேரர் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற பொது­பல சேனாவின் சங்க சம்­மே­ளத்தில் உரை­யாற்றும் போதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்­வாறு தெரி­வித்தார். தேரர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், மியன்­மாரின் விராது தேரர் இங்கு வரு­வதை தடுப்­ப­தற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­ப­திக்கும் பாது­காப்பு செய­லா­ள­ருக்கும், குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திற்கும் கடிதம் எழு­து­கி­றது.

ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­துவோம் என அச்­சு­றுத்­து­கின்­றது. பௌத்த நாடான இலங்­கைக்கு பௌத்த குரு­வா­னவர் வரு­வதை தடுப்­ப­தற்கு முஸ்லிம் கவுன்ஸில் யார்? அதற்கு என்ன அதி­காரம் உண்டு? இங்கு தேரர் வரு­வ­தற்கு முஸ்­லிம்­களின் அனு­மதி தேவை­யில்லை. முஸ்லிம் கவுன்­சிலை மாநாடு முடிந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். உலமா சபை ஒரு முஸ்லிம் பயங்­க­ர­வாத அமைப்­பாகும். அது இங்கு இயங்கி வரு­கின்­றமையானது பெரும் பயங்­க­ர­மான நிலை­மை­களை உரு­வாக்கும்.

சூறா சபை, உலமா சபை இவை­யெல்லாம் முஸ்லிம் நாடு­க­ளி­லுள்ள அமைப்­பு­க­ளாகும். அவற்­றுக்கு இங்கு என்ன வேலை. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருந்தால் இவற்றை தடை செய்ய வேண்டும். நாட்­டுக்குள் முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பும் விஸ்­த­ரிப்பும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது . வஹாபி­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது. பள்­ளி­வா­சல்­களில் இர­க­சி­ய­மாக என்ன இடம்­பெ­று­கி­றது. தப்லீக் ஜமாத்இ சூறா கவுன்சில், ஜம்­மி­யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் தலை­வர்கள் என்ன செய்­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு முடி­வு­கட்ட வேண்டும். இல்­லா­விட்டால் 27000 படை­யினர் உயிர் தியாகம் செய்து பாது­காத்த நாடு வஹாபி வாதத்­திற்கு அடி­மைப்­பட்­டு­விடும். எனவே அர­சியல் அபி­லா­ஷை­களை மறந்து நாட்­டையும் சிங்­கள பௌத்­தர்­க­ளையும் ஜனா­தி­பதி,ரணில், அநுர திஸா­நா­யக்க ஆகியோர் திரும்பிப் பார்க்க வேண்டும். காவி­யு­டைக்கு இந்­நாட்டில் ஆட்­சியை உரு­வாக்­கவும் முடியும் அதே­போன்று கவிழ்க்­கவும் முடி­யு­மென்­பதை தலை­வர்கள் உணர வேண்டும்.

சோபித தேரர் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிடப் போகி­றாராம். தேரர் திரும்பிக் பார்க்க வேண்டும் அவ­ருக்கு செலவு செய்­வது இலங்­கைக்கு எதி­ரான அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அமெ­ரிக்கத் தூத­ர­க­முமே ஆகும். சிங்­கள பௌத்த ஆட்­சியை உரு­வாக்­கு­வதே எமது திட்­ட­மாகும். அதற்கு உகந்­த­வ­ருக்கே ஆத­ரவு வழங்­குவோம்.

பிர­பா­க­ரனால் தனி­நாடு கோரும் தைரியம் இருந்­தது. ஆனால் பெரும்­பான்மை இன­மான சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு முஸ்லிம் வஹாபிவாதம் பரவுவதை தடுக்க முடியாமலிருப்பது வெட்கமாகவுள்ளது.முஸ்லிம் சட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம். தர்மாசனத்தை சரிபார்த்து வடிவமைக்கும் எமக்கு அரச ஆசனத்தை சரிபார்க்க முடியும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.-VK

இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த்

கிழக்கு மாகாணத்திலுள்ள காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் தெரிவித்துள்ளார் .

கடந்த காலங்களில் தமிழ் சமூகம் குறிப்பாக இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் மொகலாய சக்கரவர்த்திகளாலும் மேற்கத்தேயவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் மதமாற்றமும் செய்யப்பட்டனர். காலம் கடந்துள்ளபோதும்  எமக்கெதிரான இந்த சவால்கள் மாறவில்லை.

ஒரே ஒரு கேள்வியைதான் கேட்க விரும்புகிறேன். பௌத்தமும் இந்து மதமும் ஒரே மண்ணிலிருந்து தோன்றின. பாரதத்தில் இருந்துதான் தோன்றின. இப்படியாக ஒரே தேசத்தில் இருந்து தோன்றியவர்கள் இன்று ஒருவரை ஒருவர் வெறுக்கின்றோம். ஆனால் அந்நிய தேசத்திலிருந்து அறிமுகப்படுத்திய கலாசாரத்தை ஞாபகத்தில் வைத்துள்ளோம். எனவே எமது நாட்டிலுள்ள இந்துக்கள் எம்மை ஆதரித்து ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்.

கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்திலே முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒல்லாந்தர் காலத்திலே தரைமட்டமாக்கப்பட்ட அம்மன் ஆலயம் இன்று மடு மாதா தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மடு மாதா ஆலயத்தை மீட்டு மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைப்பாரா என்பதை கேட்க விரும்புகின்றேன். ஓவ்வொரு மாவட்டத்தையும் தனித்தனி மறைமாவட்டங்களாக மாற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, மதமாற்றம் செய்வதை கைவிடுவாரா என்றும் கேட்கிறேன்.

இந்துக்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து எமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். – இந்து- பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து – பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் என நான் முன்மொழிகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார் .-TC

படங்கள் அஸ்ரப் ஏ ஸமத்

WI WI2 WI3

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2014 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக