Lankamuslim.org

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!

with 7 comments

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“பிரதி அமைச்சரின் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானதும் பிழையாக வழிநடத்துவதுவதுமாகும். தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் தேசமாக்கப்பட்டவில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டதை ஊடங்கள் மூலம் முழு நாடும் அறிந்தது. பள்ளிவாசல் தேசமாக்கப்பட்டமைக்கு சாட்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் யூ ரியூப் மற்றும் இணையத்தளங்களில் உள்ளன.

இந்நிலையில், பிரதி அமைச்சர் தேவையான விசாரணைகளை மேற்கொள்வதுடன்  குறித்த ஆதாரங்களை பார்வையிட்டு தனது அறிக்கையை தெளிவுபடு;த்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்த உண்மை நிலையினை வெளிப்படுத்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தவறும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான நோக்கத்துடன் அவர் செயற்படுகின்றார் என கருதும் நிலைக்கு இச்சமூகம் தள்ளப்படும்”.

Written by lankamuslim

ஏப்ரல் 24, 2012 இல் 3:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. பேரினவாதத்தின் ஏஜன்டாக இவர் செயற்படுவது இது ஒன்றும் முதல்தடவையல்ல.காத்தான்குடி மக்கள்தான் இதற்கு பதில்சொல்லவேண்டும்.

    INUDEEN

    ஏப்ரல் 24, 2012 at 5:11 பிப

  2. ………………………சகோதர முஸ்லிம்கள் தட்டிக் கேட்க வேண்டும். சரியான நேரத்தில் காத்தான்குடி சகோதரர்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.எமது சமூகத்தைக் காட்டிக் கொடுத்து அல்லது அடகு வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் ……. அரசியல்வாதிகளை இனம் கண்டு கலை பிடுங்க வேண்டும். இது இலங்கை வாழ முஸ்லிம்கள் மீது தார்மீகக் கடமையாகும்.

    Abu Ammar

    ஏப்ரல் 24, 2012 at 6:40 பிப

  3. இவர் முஸ்லிம் சமூகத்திற்கு உருப்படியாக எதனையும் செய்யாது சும்மா இருந்தாலும் பரவில்லை. சமூகத்தை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளியும் விடுகிறார். ……………………………………………………………………………………………………………….

    Naheeb

    ஏப்ரல் 24, 2012 at 7:15 பிப

  4. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………ள்.

    (லங்கா முஸ்லிம் ஆசிரியரே, இதில் தணிக்கை செய்யும்படியாக ஒன்றுமில்லை. முழுமையாக பிரசுரியுங்கள்.
    இஸ்லாத்தின் சத்தியங்களை மறைக்க முயலாதீர்கள்.)

    Lanka Moor

    ஏப்ரல் 24, 2012 at 7:36 பிப

  5. … yarra hisspulla .. arasiyalai viddotu vaithirukkavendum makkalai vaiththu…………………………………

    jramzeelan

    ஏப்ரல் 25, 2012 at 1:46 பிப

  6. HE HAS BEEN TAKEN INDIVIDUAL EFFORT TO NEGOTIATED TINKIGIRI THERO TO RESOLVE THIS CONFLICT. HE TRIED TO PERSONAL ATTEMPT TO GET POLITICAL GAIN. DEAR GENTLEMEN, PLEASE STOP ANY ANALOGICAL COMMENTS AGAINST HIM. WE WELL COME HIS EFFORT.AND REQUEST HIM TO JOIN TEAM WORK WITH OTHER MUSLIM LEADERS. THIS IS VERY STRONG FULL TO US

    CADEER

    ஏப்ரல் 26, 2012 at 9:33 முப

  7. Who is …. he is politician.So don’t be leave this man.Allah kareem.Will see whats future.
    Althaf

    ALTHAF

    ஏப்ரல் 26, 2012 at 10:01 முப


பின்னூட்டமொன்றை இடுக